tamilnadu

கள்ளச்சாராயம்: 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருவண்ணாமலை, ஜூன் 7- ஆரணி அருகே தொடர் கள்ளச்சாராயம் காய்ச்சிய 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் படவேடு சந்தவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் பெருகெடுத்து ஓடுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தன. இதையடுத்து மாவட்டக் கூடுதல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையில் படவேடு சந்தவாசல் கண்ணமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் சோதனை நடைபெற்றது. சோதனையில் மேல்வசந்தபுரம் கிராமத்தை சேர்ந்த சத்தியராமன் (36), ஜெகநாதன்(42) ஆகியோர் சாராயம் காய்ச்சுவது தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்த ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை அழித்தனர். மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.