அவிநாசி, மே 5-
கோவையிலிருந்து மேற்வங்கம் நோக்கி மிதிவண்டியில் செல்ல முயன்ற இளைஞர்கள் 6 பேரை போலீசார் பிடித்து எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
கோவை மாவட்டம், சின்னியம்பாளையத்தில் இருந்து மேற்கு வங்காளம் நோக்கி 6 இளைஞர்கள் மிதிவண்டியில் அவிநாசி வழியாக சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அவிநாசி புறவழிச்சாலையில் ரோந்து சென்ற போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தினர். இதன்பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் எவ்வித அனுமதியும் பெறாமல், மிதிவண்டியில் மேற்கு வங்காளம் நோக்கி செல்ல முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், அந்த இளைஞர்கள் பணிபுரிந்த வந்த நிறுவன உரிமையாளரை வரவழைத்து அவரிடம் ஒப்படைத்தனர். மேலும், இணைய வழி மூலம் விண்ணப்பித்து, உரிய அனுமதிச் சீட்டு பெற்று, மேற்கு வங்காளத்திற்கு அனுப்பி வைக்குமாறு அவருக்கு அறிவுறுத்தினர்.