tamilnadu

தனியார் பேருந்து மோதியதில் இளைஞர் பலி

அவிநாசி, ஜன. 20- அவிநாசி அருகே தெக்கலூரில் இருசக்கர வாக னத்தின் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக் குள்ளானதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயி ரிழந்தார். அவிநாசியை அடுத்த தெக்கலூர், வெள்ளாண்டி பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் முருகன் (32). பனியன் தொழிலாளியான இவர் ஞாயி றன்று அவிநாசியில் இருந்து தெக்கலூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப் போது திருப்பூரில் இருந்து கோவை நோக்கி அதி வேகமாகச் சென்ற தனியார் பேருந்து இவரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இவ்விபத்தில் பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவிநாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து பேருந்து ஓட்டுநர் திருப்பூர், பிச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமாரை (30) கைது செய் தனர்.

;