திருப்பூர், ஆக.26 – திருப்பூர் அனுப்பர் பாளையம் பகுதியில் மூடப் படாமல் உள்ள சாக்கடை கால்வாயை மூடக்கோரி இந்திய வாலிபர் சங்கத்தி னர் மாநகராட்சி முதல் மண்டல அலுவலகத்தில் மனு அளித்தனர். திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டலத்துக்கு உட்பட்ட அனுப்பர்பாளை யம் ஆத்துப்பாளையம் ரோட்டில் புதிதாக கட்டப் பட்டுள்ள சாக்கடைக் கால் வாய் மேல்பகுதி மூடப்ப டாமல் உள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கும், போக்கு வரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே அதை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்று மாநகராட்சி முதல் மண்டல அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ் வில், வாலிபர் சங்க வேலம் பாளையம் நகரச் செயலா ளர் அனிபா, கிளைச் செய லாளர் சதீஷ், நகரக்குழு உறுப்பினர் சஞ்சய் ஆகி யோர் கலந்து கொண்டனர்.