அவிநாசி, ஜூன் 12- உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதனன்று விழிப்புணர்வு பிரச்சாரம் துவங் கியது. ஜூன் 12ந் தேதி உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாகும். இதை யொட்டி அவிநாசி விழுதுகள் அமைப்பு சார்பில் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடை பெற்றது. இந்த விழிப்புணர்வு பிரச் சாரத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சாந்தி லட்சுமி துவக்கி வைத்தார். மேலாளர் தவமணி முன் னிலை வகித்தார். இதில் ஒவ்வொரு கிராமங்கள்தோறும் பிரசார வாகனம் மூலம் செய்யப்பட்டன. இதில் 6 வயதிற்கு உள் பட்ட குழந்தைகள் கட்டாயம் கல்வி பயிலச் செய்ய வேண்டும். 8ஆம் வகுப்பில் இடை நின்றவர்களை கணக்கெடுத்து மீண்டும் கல்வி பயிலச் செய்வது மற்றும் பெற்றோர் இல்லா குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கவேண்டும். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் குழந்தை தொழி லாளர் முறையை ஒழிப்பது என்பது குறித்தும் விழிப்புணர்வு பிரசாரம் மேற் கொள்ளப்பட்டன. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறிய தாவது, கல்வித்துறை, தொழிலாளர் நலத் துறையினர் உள்ளிட்ட அரசுத்துறையினர் ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வு நிகழ்ச்சி களை, தொண்டு நிறுவனங்களை நடத்தச் செய்வது வருத்தமளிக்கிறது. குறிப்பாக பள்ளிக் குழந்தைகளைக் கணக்கெடுத்து அரசாங்க பள்ளியில் சேர்ப்பது அரசி னுடைய கடமையாக இருக்க வேண்டும். ஆனால் இதிலெல்லாம் அரசு தன்னை விடுவித்துக் கொள்கிறது. அவிநாசி ஒன்றி யங்களைப் பொறுத்தவரை பனியன் நிறுவ னங்கள், விசைத்தறிக் கூடங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பள்ளி விடுமுறை நாள்களில் குழந்தைத் தொழி லாளர்களை பணியமர்த்தி, குழந்தைத் தொழிலாளர் முறையை ஊக்குவிக் கின்றனர். எனவே குழந்தைத் தொழிலாளர் முறை முழுவதும் ஒழிக்க தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஏழை, எளிய கிராமப்புற பெண் குழந்தைகளின் வாழ்வை நாசமாக்கும் சுமங்கலித்திட்டம், மாங்கல்யத் திட்டம், திருமகள் திருமணத் திட்டம் போன்ற கொத்தடிமை தொழிலாளர் முறைகளை ஒழிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு சட்டப்படி நிவாரணம் வழங்க வேண்டும். ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளில் உள்ள பெண்கள் தங்கும் விடுதிகளை பதிவு செய்யாமலும், அனுமதியின்றியும் செயல் படுகின்றன. மாவட்ட நிர்வாகமும், தொழிலக பாதுகாப்புத் துறையும் பெண்கள் தங்கும் விடுதிகளை ஆய்வு செய்ய வேண்டும். குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பிற்காக அச்சட்டத்தை மட்டுமே உபயோகிக்கின்றனர். அங்கு குழந்தைகள், இளம்பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், குழந்தை கடத்தல் உள்ளிட்ட ஏராளமான பிற சட்டங்களை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு சட்டங்களில் குழந்தைகளின் வயது தொடர்பான முரண்பட்ட வரை யறைகள் களையப்பட்டு 18 வயதிற் குட்பட்ட அனைவரும் குழந்தைகளே என்பதை சட்ட ரீதியாக திருத்தம் செய்து நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.