tamilnadu

img

கிருஸ்வர்களுடன் இந்து முன்னணி தகராறு: உடுமலை காவல் நிலையத்தில் பரபரப்பு

உடுமலை, ஜூன் 8- கிருஸ்தவர்கள் மதப் பிரச்சாரம் செய்வதாக கூறி இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து இருதரப்பினரும் சனியன்று  உடுமலை காவல்துறையினர் அழைத்து விசாரணை மேற்கொண்ட போது  பரபரப்பு ஏற்பட்டது. உடுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அகில இந்திய கிருஸ்துவ அமைப்பினர் வேதாகமம் என்ற புத்தகத்தை பொது மக்களிடம்  விநியோகம் செய்து உள்ளனர். அப்போது அங்கு வந்து இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் பிரச்சாரம் செய்தவர்களிடம் தகராறில் ஈடு பட்டதாகத்  தெரிகிறது. இதனால் இரு தரப்பைச்  சேர்ந்தவர் களையும் உடுமலை காவல்நிலையத்தில் அழைத்து காவல் துறையினர் விசாரணை செய்து உள்ளனர். இதற்காக உடுமலை காவல் நிலையத்தின் முன்பு இரு தரப்பினரும் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.