திருப்பூர், டிச. 7 - வன்முறையற்ற தமிழகம், போதையற்ற தமிழகம் என்ற முழக்கத்தோடு 400 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்ட திருப்பூர் மாவட்டப் பெண்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு விழா நடத்தியது. தமிழகத்தில் பெண்கள் மீதான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், போதை கலாச்சா ரத்தால் பெண்கள் மீது ஏவப்படும் ஒடுக்குமுறையை தடுத்திடவும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் 10 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டது. இரு முனைக ளில் தொடங்கி சென்னை கோட் டையை முற்றுகையிடும் நோக்கு டன் நடைபெற்ற இந்த நடைபய ணத்தின் இறுதி நாளில் தாம்ப ரத்தில் காவல் துறை அடக்கு முறையை ஏவி பெண்களைக் கைது செய்தது. இந்த இயக்கத்தில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பெண் கள் பங்கேற்றனர். மாதர் சங்கத் தின் திருப்பூர் மாவட்டச் செயலா ளரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினருமான எஸ்.பவித்ராதேவி, திருப்பூர் தெற்கு மாநகரத்தைச் சேர்ந்த மினி, சசி, ஜிஷி, ஊத்துக்குளி செல்வி, பொங்கலூர் நிஷா ஆகிய ஆறு பேர் முழுமையாக 10 நாட்கள் பங்கேற்றனர். அதே போல் தெற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த ஷாலினி, சகுந்தலா ஆகி யோர் 8 நாட்கள் கலந்து கொண் டனர். போராட்டத்தின் எழுச்சி யால் உந்தப்பட்டு மாதர் சங்கத் ்தின் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சாவித்திரி, தெற்கு ஒன்றியச் செயலாளர் பா.லட் சுமி ஆகியோர் மூன்று நாட்களும், ஊத்துக்குளி ஒன்றியச் செயலா ளர் கே.சரஸ்வதி, வடக்கு ஒன் றியச் செயலாளர் சி.பானுமதி, முன்னாள் செயலாளர் கே.எஸ். கற்பகம் ஆகியோர் கடைசி இரு நாட்களும் இந்த நடைபயண இயக்கத்தில் கலந்து கொண்ட னர். இந்த பெண்களுக்குப் பாராட்டு விழா மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டத் தலைமை அலுவ லகத்தில் சனிக்கிழமை பகல் 1 மணியளவில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.ரங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. நடைபயண இயக்கத்தில் பங் கேற்ற அனுபவத்தை திருப்பூர் மாதர்களுடன் தலைமை ஏற்றுச் சென்ற மாவட்டச் செயலாளர் எஸ்.பவித்ராதேவி உணர்ச்சிப் பூர்வமாக எடுத்துரைத்தார். இதை யடுத்து வாலிபர் சங்கத்தின் திருப் பூர் மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன், விவசாயி கள் சங்க மாவட்டச் செயலா ளர் ஆர்.குமார், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ் ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் ஆகியோர் பாராட்டிப் பேசினர். போதையற்ற தமிழகம், வன்மு றையற்ற தமிழகம் என்ற முழக் கத்துடன் 10 நாட்கள் 400 கிலோ மீட்டர் நடைபயணத்தில் பங்கேற் றதில் கிடைத்த எண்ணற்ற அனுப வங்கள், நம்பிக்கை, உற்சாகம் ஆகியவற்றைப் பயன்படுத்தி மாவட்டம் முழுமையும் புதிய உத்வேகத்துடன் செயல்படு வோம் என மாதர் சங்கத்தினர் தெரி வித்தனர். இதில் நடைபயணம் சென்ற அனைத்துப் பெண்களுக்கும் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோபால் உள்பட நிர்வாகிகள் துண்டு அணி வித்து வாழ்த்தினர். இந்த நிகழ் வில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.