உடுமலை, ஜூன் 29- உடுமலை வட்டாட் சியர் அலுவலகத்தில், கடந்த இரண்டு வாரங் களாக நடைபெற்று வந்த ஜமாபந்தி நிறைவு நாளான வியாழனன்று குடிமங்கலம் வருவாய் கிராமங்களான கொசவம்பாளையம், அணி கடவு, விருகள்பட்டி, புதுப் பாளையம்,இலுப்புநகரம், பண்ணைக்கிணறு ஆகிய கிராமங்களுக்கு திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலர் சாகுல் அமீது தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் அணிக்கடவு கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி விடு முறையில் இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. முத்துசாமி ஏன் ஜமாபந்தியில் கலந்து கொள்ளவில்லை என அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராம அலுவலரிடம் கேட்டதாகவும், அதற்கு முத்துசாமிக்கு காலில் காயம் ஏற்பட்டு உள்ளதால் அவர் விடுமுறையில் உள்ளார் என்று காரணம் சொல்லியுள்ளார்கள். இதை ஏற்றுக் கொள்ளாத அதிகாரிகள் முத்துசாமி உடனடியாக உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று கூறியதால், கிராம உதவியாளர் முத்துசாமி சக்கர நாற்காலியில் வட்டாட்சியர் அலுவல கத்திற்கு வந்தார். இது குறித்து கிராம நிர்வாக உதவி யாளர்கள் கூறுகையில், அணிகடவு கிராம உதவியாளர் புதனன்று ஒரு விவசாய நிலத்தின் ஆழ்குழாய் கிணற்றை ஆய்வு செய்ய அதிகாரிகளுடன் செல்லும் போது விளைநிலத்தில் கீழே விழுந்து உள்ளார். இதனால் காலில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் இருந்தார். மேலும் தான் பார்க்க வேண்டிய ஜமாபந்தி பணி களை இன்னொரு கிராம உதவியாளர் ஒருவரை நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் உடனடியாக வேலைக்கு வர வேண்டும் என்று ஜமாபந்தி அதி காரி சொல்லியது மனித நேயமே இல்லாத ஒன்று என்றனர்.