tamilnadu

img

சட்டத்துக்குப் புறம்பாக காவல்துறையின் நடவடிக்கை : வழக்கறிஞர்கள் புகார்

திருப்பூர், ஜூன் 17- வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுத்த நபர் மீது வழக்குப் பதிவு செய்த சம்பவத்தில், துணை காவல்கண்கா ணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்த வேண் டும் என திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி தேவம் பாளையம் பகுதியில் லோகநாதன் என் பவர் வீட்டு ஆட்டுக்குட்டி வேறு சமூகத் தினரின் தோட்டத்தில் மேய்ந்ததால் அச் சமூகத்தினர் லோகநாதன் மற்றும் அவ ரது குடும்பத்தினர் முன்னிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வற்புறுத்தி யுள்ளனர் .

அதனை மறுத்த லோகநாதன் குடும்பத்தினர் மீது சாதிய ரீதியிலான வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அவிநாசி காவல் நிலையத்தில் லோகநாதன் கொடுத்த புகாரின் மீது நட வடிக்கை எடுக்காத அவிநாசி காவல்துறை யினர் லோகநாதன் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண் டுள்ளனர்.

இது சட்டத்திற்கு புறம்பான செயல் எனவும் இதன் மீது துணை காவல்கண் காணிப்பாளர் தலைமையில் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி சமூக நீதிக்கான வழக்க றிஞர்கள் குழுமம் சார்பில் புதனன்று திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட் டுள்ளது.