tamilnadu

img

சமூக இடைவெளியை பின்பற்ற  குடைபிடித்து விழிப்புணர்வு

அவிநாசி, ஏப்.29-  அவிநாசி அருகே நடுவச்சேரி கிராமப் பகுதியில்   சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் குடைபிடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வெகு வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த  சுகாதாரத்துறை சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தி வருகிறது. இதனைத்தொடர்ந்து  கேரள மாநில அரசாங்கம் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கேரளாவில் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் குடை பிடிக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். இதேபோல் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் சமூக இடைவெளியை பின்பற்ற குடைபிடித்து செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனைப் பின்பற்றும் வகையில் அவிநாசியில் முதல் ஊராட்சியாக  நடுவச்சேரி ஊராட்சி பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த கே‌‌.சி. வரதராஜன் தலைமையில்  ஊராட்சி செயலாளர் மணிகண்டன் முன்னிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற உறுப்பினர் ரங்கசாமி உள்ளிட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற குடைபிடித்து  பொதுமக்களுக்கு விழிப்புணர் ஏற்படுத்தினர்.