உடுமலை, பிப். 3- உடுமலை அருகே சிமா நிறு வனத்தின் பருத்தி வயல்களில் உகாண்டா நாட்டு வல்லுநர் குழு ஆய்வு செய்து தங்கள் நாட்டுக்கு கந்த ரகங்களை தேர்வு செய்தனர். கோயமுத்தூர் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் பருத்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சிக் கழகம், உகாண்டா நாட்டுடன் இணைந்து பருத்தி ஆராய்ச்சியில் இருதரப்பு உறவுகளை மேம்படுத் தும் பொருட்டு, புதிய ரகங்கள், அதிக மகசூல், அரவைத் திறன் கொண்ட பருத்தி ரகங்களை பரி மாற்றம் செய்து புதிய பருத்தி விதை களை உருவாக்கும் ஆராய்ச்சியின் அடிப்படையில் ஈடுபட்டுள்ளது. அதன் அடிப்படையில் உகாண்டா நாட்டு பிரதிநிதிகள் குழு மரபியல் வல்லுநர் டாக்டர். மார்டின் ஒராவு தலைமையிலான குழுவினர் உடுமலை வட்டம், பொன்னேரியில் உள்ள சிமா நிறு வனத்தின் ஆராய்ச்சி பண்ணை மற்றும் சுற்று வட்டார பகுதிக ளில் விவசாயிகள் சாகுபடி செய் துள்ள பருத்தி வயல்களை பார் வையிட்டனர். சிமா நிறுவனத் தின் சார்பில் மரபியல் வல்லுநர் மற்றும் செயலாளர் டாக்டர். ஆஷாராணி, ஆராய்ச்சி அலுவலர் முத்துசாமி இணைந்து உகாண்டா நாட்டு குழுவினருடன் பொன் னேரியில் உள்ள சிமா பருத்தி ஆராய்ச்சி பண்ணையில் ஆலோ சனை நடத்தினர். பொன்னேரியில் உள்ள சிமா நிறுவனத்தின் ஆராய்ச்சி பண் ணையில் 700க்கும் மேற்பட்ட சிறந்த குணாதியசங்கள் கொண்ட, அதிக மகசூல், நோய் எதிர்ப்பு திறன், பூச்சி, பூஞ்சான தாக்கு தலை எதிர்த்து வளரக்கூடிய, அறவைத் திறன் மிக்க, நடுத் தரம் முதல் அதி நீண்ட இழை நீளம் உள்ள ரகங்கள் பயிரடப் பட்டுள்ளது. இப்பருத்தி வயல்களை உகாண்டா நாட்டுக்குழு பார் வையிட்டு அதில் அந்நாட்டு தட்பவெப்ப நிலைக்கு ஏற்பு டைய ரகங்களை தேர்வு செய் தனர். சிமா பருத்தி நிறுவனம் சான்று பெற்ற ஆதார நிலை விதைகளை உற்பத்தி செய்து வருகிறது. விவசாயிகளின் வயல்களில் சாகுபடி செய்துள்ள விதைப்பண்ணை பருத்தி வயல் களை பார்வையிட்டு விதை உற்பத்தி தொழில் நுட்பங்களை கேட்டறிந்தனர்.