அவிநாசி, அக். 26- பெருமாநல்லூர் அருகே தட்டான் குட்டை பகுதியில் இருசக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பனியன் தொழிலாளி உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் அருகே வள்ளிபுரம் சுள்ளிப்பாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் தாமோத ரன்(25). இவர் நியூ திருப்பூர் தேநாஜி ஆயத்த ஆடைப் பூங்காவில் பனியன் தொழிலாள ராக பணியாற்றி வருகிறார். இந்நிலை யில், சனியன்று இரவு நியூ திருப்பூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டி ருந்தார். அப்போது, தட்டான்குட்டை வெள்ளிப்புத்தூர் பிரிவு அருகே செல்லும் போது, எதிரே வந்த சதீஷ்(27) என்பவரின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள் ளானார். இதில் பலத்த காயமடைந்த தாமோ தரன் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.