அவிநாசி, மே 17 - அவிநாசி அருகே சாதியை இழிவாக குறிப்பிட்டு விவசாயியை தாக்க முயன்ற 4 பேர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சி தேவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (25). இவரது ஆடு வீட்டிற்கு அருகிலுள்ள மூர்த்தி என்பவரது தோட்டத்திற்குள் சென்றுள் ளது. இதையறிந்த லோகநாதன் தனது ஆட்டுக் குட்டியை மீட்பதற்காக தனது தங்கையுடன் சென்றுள்ளார். அப்போது அவரது ஆடு கட்டி வைக்கப்பட்டிந்த நிலை யில், தோட்டத்து உரிமையாளரின் மக னான பிரவீன் என்பவரிடம் தனது ஆட்டுக் குட்டியை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு, பிரவீன் மற்றும் அவரது குடும்பத்தினர் லோகாநாதனை சாதியை குறிப்பிட்டு இழிவாக பேசி தாக்க முயன்றுள்ளனர்.
மேலும், ஊரைக்கூட்டி லோகநாதனை மன்னிப்பு கேட்க வேண்டும் என மிரட்டி யுள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த லோகநாதன் கடந்த புதனன்று அவிநாசி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள் ளார். ஆனால், இதன்பின்னர் காவல்துறை யினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளரிடம் மீண்டும் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, வெள்ளி யன்று பிரவீன் உட்பட 4 பேர் மீது வன்கொ டுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், வழக்கு பதிந் தவர்கள் அனைவரும் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர் களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.