tamilnadu

img

அரசு பள்ளி வளாகத்தில் மின்மாற்றி சாபாநாயகரிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை பெற்றோர்கள் அதிருப்தி

அவிநாசி, அக். 25- அவிநாசி அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள மின் மாற்றியை அப்புறப்படுத்த கோரிக்கை விடுத்தும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்காதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவினாசி ஒன்றியம், பாப்பாங் குளம் ஊராட்சிக்குட்பட்ட பஞ்ச லிங்கம் பாளையத்தில் அரசுப் பள்ளி அமைந்துள்ளது. இப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் 300 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலை யில் பள்ளி வளாகத்திற்குள் மின் மாற்றி அமைந்துள்ள காரணமாக குழந் தைகளுக்கு அபாயம் ஏற்படும் என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின் றனர்.  இதுகுறித்து பொதுமக்கள் கூறு கையில், அரசு பள்ளி தொடர்ந்து ஐந்து வருடங்களாக 100 சதவிகித தேர்ச்சி பெற்று வருகிறது. இப்பள் ளியில் மின்மாற்றி அமைந்திருப்பதை வேறு இடத்தில் மாற்றி அமைக்க அவிநாசி சட்டமன்ற உறுப்பினர் ப.தனபாலிடம் பல முறை மனுக் கள் கொடுத்து இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் மேற் கொள்ளவில்லை. இந்நிலையில் பருவமழை பெய்து வருவதால் பள்ளி குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். எனவே, கல்வித்துறையும், மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு மின்மாற் றியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.