tamilnadu

img

திருப்பூர் மூத்த தோழர் பி.முருகேசன் காலமானார்

திருப்பூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக் குழு உறுப்பினரும், திருப்பூர் வடக்கு மாநகரச் செயலாளருமான தோழர் பி.முருகேசன் உடல் நலக்குறைவால் செவ்வாயன்று காலமானார்.

அவினாசி பகுதியிலுள்ள பெரிய கருணைபாளையம் கிராமத்தில் பிறந்தவர் பி.முருகேசன். விசைத்தறித் தொழிலாளியாக வாழ்வைத் துவக்கிய அவர் ஆசர்மில் தொழிலாளியாக மாறி, சிஐடியு பஞ்சாலை சங்கத்தின் மாவட்டச் செயலாளராகவும்,  மாநில சம்மேளனத்தின் செயலாளர்களில் ஒருவராகவும் தனது சிறப்பான பங்களிப்பைச் செலுத்தியவர். இதேபோல் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராகவும், திருப்பூர் வடக்கு மாநகரச் செயலாளராகவும் செயல்பட்டு, இளைய தோழர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த  சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பி.முருகேசன் செவ்வாயன்று மதியம் காலமானார். இவரின் மறைவை அறிந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் மற்றும் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு, இடைக்குழு உறுப்பினர்கள், சிஐடியு தலைவர்கள் கே.உண்ணிகிருஷ்ணன்,  சி.பத்மநாபன், எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் வாலிபர், மாதர், மாணவர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

மேலும், மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்,  மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி,  ஏ.கே.பத்மனாபன்,  மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.குணசேகரன்,  கே.கனகராஜ் மற்றும் பி.ஆர்.நடராஜன் எம்.பி உள்ளிட்ட தலைவர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு அவரது குடும்பத்தாருக்கு இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்தனர்.

;