திருப்பூர், மார்ச் 24 – திருப்பூரில் கொரோனா பாதிப் பைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆலைகளை மூடினால் தொழிலா ளர்களுக்கு சம்பளத்துடன் விடு முறை வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரியுள் ளன. ஆனால் இது குறித்து மாவட்ட ஆட்சியரோ, தொழில் அமைப்பினரோ வாய் திறக்காமல் மௌனம் காத்தது ஏமாற்றம் அளிப்பதாக தொழிற்சங்கத்தினர் கூறியுள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத் தில் திங்களன்று தொழிற்சங்க நிர் வாகிகள் ஜி.சம்பத் (சிஐடியு), மனோ கரன் (எம்எல்எப்), என்.சேகர் (ஏஐ டியுசி), க.ராமகிருஷ்ணன் (எல்பி எப்), எ.சிவசாமி (ஐஎன்டியுசி), பூபதி (எல்பிஎப்) ஆகியோர் மாவட்ட ஆட்சியர் கே.விஜய கார்த்திகேயனைச் சந்தித்து மனு அளித்தனர். இதில், கொரோனா வைரஸ் தாக்குதல் தடுப்பு நடவ டிக்கையாக தொழிற்சாலைகள் மூடப்படும் நிலையில், அங்கு வேலை செய்யும் தொழிலாளர்க ளுக்கு சம்பளத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இம்மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் மனு குறித்து ஆலோசிப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து தொழில் அமைப்பு நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனைச் சந்தித் துப் பேசினர். அப்போது கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஆலைகளை தாமாக முன் வந்து மார்ச் 31 ஆம் தேதி வரை மூடும்படி ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கேட்டுக் கொண் டார். தொழில் அமைப்பு நிர்வாகிக ளும், ஆலைகளை மூடுவதாக தெரி வித்தனர். அப்போது விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள தொழிலா ளர்களுக்கு உரிய உணவு, பாது காப்பு ஏற்பாடுகள் செய்து தரப்ப டும் என்றும் கூறினர். ஆனால் விடுதித் தொழிலாளர் கள் மட்டுமின்றி, மற்ற நிரந்தர, தினக்கூலி, ஒப்பந்த தொழிலாளர் களுக்கு இந்த ஆலை மூடல் கால மான எட்டு நாட்களுக்கு ஊதியம் வழங்குவது பற்றி எதுவும் கூற வில்லை. ஆட்சியர் விடுத்துள்ள செய்திக்குறிப்பிலும் தொழிலா ளர்களுக்கு ஊதியம் வழங்குவது பற்றி ஏதும் குறிப்பிடப்பட வில்லை. இது தொழிற்சங்கங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. குறிப்பாக ஏற்கெனவே வேலைவாய்ப்புக் குறைவு கார ணமாக வருமானம் குறைந்துள்ள நிலையில் தவிர்க்க முடியாமல் ஆலை மூடல் செய்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் தொழிலாளர்கள் நிலையை எண் ணிப் பார்த்து அவர்கள் வாழ்வாதா ரத்தைப் பாதுகாக்கவும் மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தி இருக்க வேண்டும். கடந்த மார்ச் 22ஆம் தேதி நாடு தழுவிய ஊரடங்கை அறிவித்த பிரதமர் மோடி தொழி லாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் பிரதமர் சொன்னதை உத்தரவாதப்படுத்தக்கூட ஆட்சி யர் எதுவும் செய்யாததும், தொழில் அமைப்பினரும் அதைப்பற்றி வாய் திறக்காததும் கண்டிக்கத்தக் கது. இது குறித்து அனைத்துத் தொழிற்சங்கங்களின் ஆலோச னைக் கூட்டம் நடத்தி அதில் உரிய மேல் நடவடிக்கைக்குச் செல் வோம் என்று சிஐடியு பனியன் தொழிற்சங்க பொதுச் செயலாளர் ஜி.சம்பத் கூறினார்.