tamilnadu

வளர்ச்சியை நம்பிக்கையுடன் எதிர்நோக்கும் திருப்பூர்

திருப்பூரிலிருந்து பின்னலாடை ஏற்று மதி கடந்த 2021 - 22 ஆம் ஆண்டில் ரூ.33,525 கோடியாக இருந்தது. மேலும் நடப்பு நிதி யாண்டான 2022 - 2023 ஆம் ஆண்டில், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், ஏற்றுமதி ரூ.26,260 கோடியாக பதிவாகியுள்ளது. கொரானா பாதிப்பால் ஏற்பட்ட தாக்கத்தின் விளைவால் பொருளா தாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை, உக்ரைன் -  ரஷ்யப் போரினால், சங்கிலி தொடரில் ஏற் பட்ட நெருக்கடியின் விளைவால், உணவுப் பொருட்கள், எரிவாயு மற்றும் எண்ணெய் விலை உயர்வு மற்றும் பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த அந்தந்த நாட்டின் மத்திய வங்கிகள் அதிகரித்த வட்டி உயர்வு, டால ரின் மதிப்பு உயர்வு போன்ற காரணங்க ளால், திருப்பூர் ஏற்றுமதி, 2021 - 22 ஆம்  ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதி யாண்டில் ஆகஸ்ட் 2022 முதல் டிசம்பர் 2022 வரை டாலர் மதிப்பில் சராசரியாக 20.4 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால், அதே  சமயம், ஏப்ரல் 2022 முதல் டிசம்பர் 2022 வரையிலான ஒன்பது மாதங்களுக்கு, 2021 - 22 ஆம் ஆண்டின் ஒன்பது மாத காலத்துடன் ஒப்பிடுகையில், ஒட்டுமொத்த ஏற்றுமதி 3.6 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தற்சமயம், பருத்தி சார்ந்த ஆடைகளை மட்டுமே ஏற்றுமதி செய்து வரும் திருப்பூர் நம் நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்று மதியில், 55 சதவிகிதம் பங்களிப்பை வழங்கி வருகிறது. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், மேன் மேடு பைபர் (எம்.எம்.எப்) எனப்படும் செயற்கையிழை துணி கள் மற்றும் செயற்கை ஆடைகளை ஏற்று மதி செய்வதன் மூலம் உலக சந்தையில் நமது சந்தை பங்கை அதிகரிக்க நல்ல வாய்ப்பு உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் ஏற்படுத்தப்பட்ட விரிவான பொருளா தார கூட்டு ஒப்பந்தம் (சிஇபிஏ) மற்றும் ஆஸ்திரேலியாவுடன் பொருளாதார ஒத்து ழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (இசிடிஏ) ஆகியவை இந்த நாடுகளுடன் நமது ஏற்று மதியை அதிகரிக்க உதவும். மேலும், 2023 பிப்ரவரி இறுதிக்குள் பிரிட்டனுடனான வர்த் தக ஒப்பந்தமும், இன்னும் ஆறு மாதங்க ளில் கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தமும் நமது ஏற்றுமதியை அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கும் என்று நாங்கள் நம்பு கிறோம். உலக நாடுகள் சீனாவைத் தவிர்த்து சீனா + 1 கொள்கையை நடை முறைப்படுத்த நினைப்பதால் நம் நாட்டு ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளது. பின்னலாடை தொழில் நிலைத்து நின்று வளர்ச்சியுற, அவசர கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் (இசிஎல்ஜிஎஸ்), குறு, சிறு  மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக் கான (எம்எஸ்எம்இ) சிறப்புத் திட்டத்தை  புதிதாக அறிவிக்கவும், வட்டி சமன்படுத் தும் திட்டத்தின் கீழ் (இன்ட்ரஸ்ட் ஈக்யுலி சேஷன் ஸ்கீம்) வழங்கப்படும் வட்டி மானிய விகிதத்தை 3 சதவிகிதத்தில் இருந்து 5  சதவிகிதம் ஆக உயர்த்துமாறும், மாறுத லுக்குட்படும் வட்டி விகிதத்திலிருந்து காப்பாற்றிட ஏற்றுமதி மறுநிதியளிப்பு திட் டத்தை அறிவிக்குமாறும் மத்திய அரசி டம் கோரிக்கை விடுத்துள்ளோம். திருப்பூர் மறுபடியும் புத்துணர்ச்சி யுடன் ஏற்றுமதி தொழிலில் முன்னேற்றம் கண்டிடும்.