tamilnadu

திருப்பூரில் பெண்குழந்தைகள் விருது

திருப்பூர், செப்.13- தேசியப் பெண் குழந் தைகள் தினமான ஜனவரி 24-ஆம் தேதியன்று தமிழக அரசால் 2020-ம் ஆண்டு பெண் குழந்தைகளுக்கான விருது வழங்கப்பட உள் ளது. இவ்விருதிற்கான பாராட்டுப் பத்திரம் மற்றும் ரூ.1 லட்சத்திற்கான கா சோலை இவ்விருது பெருவோருக்கு வழங்கப் படும். பெண் கல்வி, பெண் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, குழந்தைத் திரு மணத்தைத் தடுத்தல், தற் காப்புக் கலையில் மாநில அளவிலான சான்றுகள் பெற்றிருத்தல், விளையாட் டில் மாநில அளவில் முதன்மை பெற்றிருத்தல், சமூக அவலங்கள் மற்றும்  அவற்றிற்கான தீர்வு காண் பதற்கான புத்தகங்கள் மற்றும் கையேடுகள் எழுதி  வெளியிட்டிருத்தல், போன் றவற்றில் சிறப்புடன் செயல்  புரிந்த 5 வயது முதல் 18  வயதிற்கு உட்பட்ட தமிழ கத்தைச் சார்ந்தவர்கள் இதற் குத் தகுதியானவர்கள் ஆவர். இவர்கள் தங்களின்  விவரங்களை தங்கள் சாதனைகளின் சான்று களோடு ஒரு பக்கத்திற்கு மிகாத ஆதாரங்களுடன் கூடிய முன்மொழிவுப் படி வத்தை திருப்பூர் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு அக்டோபர் 30க் -குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறுமாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்தி கேயன்  தெரிவித்துள்ளார்.

;