tamilnadu

img

திருப்பூர்: கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டம்

திருப்பூர், அக்.2- திருப்பூர் காங்கயம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் சரிவர உணவு விநியோகிக்கப்படுவ தில்லை எனக்கூறி நோயாளிகள் உணவு உண்ண மறுத்து போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற் பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரு கிறது. இந்நிலையில், திருப்பூர் - காங்கயம் சாலையில் உள்ள தனி யார் பள்ளி ஒன்றில் மாவட்ட சித்த மருத்துவம் சார்பில் கொரோனா விற்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் சித்த மருத்துவ மையம் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. ஏற்குறைய 100 பேர் தங்கக் கூடிய வகையில் அமைக் கப்பட்டுள்ள இந்த கொரோனா சிறப்பு மருத்துவ முகாமில் தற்போது 85 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

இச்சூழ்நிலையில் இம்மையத் தில் மாவட்ட நிர்வாகம் சரிவர உணவு விநியோகிப்பது இல்லை என கூறப்படுகிறது. இது குறித்து புகார் அளித்தாலும் மருத்துவர் கள் மற்றும் செவிலியர்கள் அலட்சி யமாக பதில் அளிக்கின்றனர். தற் போது 85 பேர் அனுமதிக்கப்பட் டுள்ள சூழ்நிலையில் இரண்டு கட்ட மாக உணவு விநியோகிப்பதாகவும், அதுவும் தாமதப்படுத்துவதாகவும் கூறி வெள்ளியன்று மதியம் நோயா ளிகள் அனைவரும் தரமான உணவு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உணவு உண்ண மறுத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் நேரில் வந்து கொரோனா நோயாளிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில், மேற்படி கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரி விப்பதாக கூறியதையடுத்து, நோயாளிகள் போராட்டத்தை கைவிட்டனர்.