tamilnadu

ஊழல் குற்றச்சாட்டை மூடி மறைக்க வழக்குப் பதிந்து அச்சுறுத்துவதா? - மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

திருப்பூர், அக்.19- திருப்பூரில் ரூ.7.70 லட்சத் தில் பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது தொடர்பாக வெளியான செய்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிந்து, கைது செய்துள்ள சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள் ளது. இதுதொடர்பாக, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் மாவட்டச் செயலாளர் செ.முத் துக்கண்ணன் திங்களன்று விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: திருப்பூர் மாநகரில் தெற்கு எம்எல்ஏ தொகுதி மேம் பாட்டு நிதி மற்றும் மாநகராட்சி நிறைவேற்றியுள்ள குடிநீர்த் தொட்டி அமைப்பு, பேருந்து நிழற்குடை, மயான காரிய அறை மின்விளக்கு வசதி என பல்வேறு பணிகளில் குறிப்பிடப்பட்டுள்ள திட்ட மதிப்பீட்டு தொகைக்கும், உண்மையில் செலவிடப்பட்ட தொகைக்கும் மலைக்கும், மடு வுக்கும் உள்ளது போல மிகப் பெரும் வித்தியாசம் உள்ளது. எந்த ஆய்வும் செய்யாமல் மேலோட்டமாகப் பார்த்தாலே இதை அறிந்து கொள்ள முடிகி றது.

இந்த பின்னணியில்தான் திருப்பூர் 50ஆவது வார்டில் சுமார் 2 ஆயிரம் லிட்டர் பிளாஸ் டிக் குடிநீர் தொட்டி வைத்த தற்கு ரூ.7.70 லட்சம் மதிப்பீடு என அந்த பிளாஸ்டிக் தொட்டியி லேயே எழுதப்பட்டுள்ளது. ரூ.7. 70 லட்சம் மதிப்பீட்டு செலவிற்கு மாநகராட்சி ஆணையரின் விளக்க அறிவிப்பு ஊழல் நடவ டிக்கையை உறுதி செய்வதாக உள்ளது. இது போல் எண்ணற் றப் பணிகளிலும் சம்பந்தமே இல்லாத அளவுக்கு பெருந் தொகை செலவிடப்பட்டதாக வெளிப்படையாகவே எழுதியும் வைத்துள்ளனர். இவை சமூக வலைதளங்க ளிலும், நாளேடுகள் மற்றும் தொலைகாட்சி ஊடகங்களிலும் வெளிவந்து ஆளும் கட்சி, அதி காரிகள் கூட்டாகச் செய்திருக் கும் ஊழல்கள் மாநிலம் முழுவ தும் சந்தி சிரிக்கின்றன. இப்படி அம்பலப்பட்டுப் போன நிலை யில், ஆத்திரம் கொண்ட ஆளும் கட்சி எம்எல்ஏ, தங்கள் அரசு அதி காரத்தைத் தவறாகப் பயன்ப டுத்தி, காவல் துறையில் செல் வாக்குச் செலுத்தி சமூக வலை தளங்களில் அவதூறு பரப்பிய தாக எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு வரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். குறிப்பாக 153, 504, 505 (1) (பி) 66 ஐடி சட்டம் உள்ளிட்ட  பல் வேறு பிரிவுகளில் காவல் துறை வழக்கு பதிவு செய்து கைது செய் துள்ளது. ஆளும் கட்சியினர் புகார் கொடுத்தால் அவசர, அவ சரமாக வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் காவல் துறை, ஆளும் கட்சியின் ஏவல் துறை யாக செயல்படுவது கண்டனத் துக்குரியது. ஆளும் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் செயல்பாடு, மாநகராட்சி செயல்பாடுகளைப் பற்றி யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஊடகங்கள், சமூக வலைதளங்களில் இது பற்றிய செய்திகளைப் பகிர்ந் தால் அதற்கு தெளிவான விளக் கம் சொல்ல வேண்டியது ஆட்சி யாளர்களின் கடமை. அதை விட்டுவிட்டு வழக்குப் பதிவது, கைது செய்வது போன்ற அடக் குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வது அராஜகமான நடவடிக்கையாகும்.

மடியில் கன மில்லை என்றால் வழியில் பய மெதற்கு? எனவே கருத்துச் சுதந்திரம் எனும் அடிப்படை ஜனநாயக உரிமையை அச்சுறுத்தி முடக்க நினைக்கும் ஆளும் அதிமுக ஆட்சியாளர்களுக்கும், காவல் துறைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்வதுடன், பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்து கிறது. அத்துடன் 2016ஆம் ஆண்டு முதல் திருப்பூர் தெற்குத் தொகுதி எம்எல்ஏ தொகுதி மேம் பாட்டு நிதியிலும், திருப்பூர் மாந கராட்சி நிர்வாகத்தின் பொது நிதியிலும் மேற்கொள்ளப்பட்ட அனைத்துப் பணிகள் குறித்தும், அதில் நடைபெற்றிருக்கும் ஊழல், முறைகேடுகள் குறித்தும் மாநில அரசு உடனடியாக விசா ரணைக்கு உத்தரவிட வேண்டும். ஊழல், முறைகேட்டில் தொடர் புடைய அனைவரையும் சட்டப் படி தண்டிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்வதாக மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன் கூறியுள்ளார்.