tamilnadu

ஆ.ராசாவிற்கு ஆதரவாக பனியன் தொழிற்சங்கத்தினர் வாக்கு சேகரிப்பு

அவிநாசி ஏப்.8-

நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ. ராசாவுக்கு ஆதரவாக பனியன் தொழிற்சங்கத்தினர் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக ஆ. ராசா போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக சிஐடியு , ஏ ஐ டி யு சி, எல் பி எப், எம் எல் எப், ஐஎன்டியுசி, எச்எம்ஸ் ஆகியபனியன் தொழிற்சங்கத்தினர் திருமுருகன்பூண்டி, அவிநாசிபகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் சிஐடியு சார்பில் ஈஸ்வரமூர்த்தி , கணேஷ், ஏ ஐ டி யு சி சேகர், சண்முகம், எல் பிஎப் ராமகிருஷ்ணன், பூப,தி ஐஎன்டியுசி சிவசாமி, எச்எம்எஸ் முத்துச்சாமி, எம்எல்எம் பெருமாள், கோவிந்தராஜ் உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

;