திருப்பூர், ஜூன் 30- திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சோதனைச் சாவடியில் நிற்காமல் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை துரத்திப் பிடிக்கச் சென்ற காவலர் அந்த லாரி மோதி பரிதாபமாக பலியானார். திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் பிரபு (25). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு காவல் துறையில் சேர்ந்தார். தற்போது காங்கேயம் போலீஸ் நிலையத் தில் பணியாற்றி வந்தார்.
திங்களன்று இரவு காங்கேயம் அடுத்த திட்டுபாறை பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தார். இதனிடையே ஈரோடு மாவட்டம் நொய் யல் சோதனைச்சாவடியில் கன்டெய்னர் லாரி ஒன்று அங்கிருந்த பேரிகார்டுகள் மீது மோதி விட்டு நிற்காமல் வேகமாக சென்றது. இதனையடுத்து அங்கிருந்த காவல் துறை யினர் திட்டுபாறை சோதனைச்சாவடிக்கு தகவல் அளித்தனர். இங்கு அந்த கண்டெய் னர் லாரியை மடக்கிப் பிடிக்க தயார் நிலையில் இருந்தனர். ஆனால் வேக மாக வந்த கண்டெய்னர் லாரி திட்டுபாறை சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்றது.
இதனையடுத்து சோதனைச் சாவடியில் பணியில் இருந்த பிரபு தனது இரு சக்கர வாக னத்தை எடுத்துக்கொண்டு லாரியை மடக்கி பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் எதிர்பாரா தவிதமாக அந்த லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே லாரி ஓட்டுனர் வேறு பாதையில் ஈரோடு நோக்கி சென்றார் ஆனால், காங்கேயம் ரோந்து போலீ ஸார் லாரியை துரத்தி வந்து, ஈரோடு மாவட் டம் ஓடாநிலை பகுதியில் மடக்கிப் பிடித்த னர். விசாரணையில் ஓட்டுநர் ராமநாதபு ரத்தைச் சேர்ந்த பாஸ்கரன்(40) என்பதும் குடிபோதையில் அவர் லாரியை ஓட்டி வந்தது தெரியவந்தது இதையடுத்து காங் கேயம் போலீசார் லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.