tamilnadu

ஜூலை 23ல் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் முடிவு

திருப்பூர், ஜூலை 20 - தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநிலத் தலைவர்  மு.சுப்பிரமணியன் மீது மேற்கொள்ளப் பட்ட தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி ஜூலை 23ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க திருப்பூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் சனியன்று மாவட்டத் தலை வர் ஞானசேகரன் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் பி.செந்தில்குமார் அறிக்கை வாசித்தார். பொருளாளர் எம்.கண்ணன் நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்தார்.இதில் ஜூலை 23ஆம் தேதி நடைபெறும் ஒரு நாள் உள்ளிருப்புப் போராட்டத்தை திருப் பூர் மாவட்டத்தில் முழு வெற்றி பெறச் செய்வது, தென்காசியில் 26, 27 தேதிகளில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 500 பேர் பங்கேற் பது என்று தீர்மானிக்கப்பட்டது.

;