tamilnadu

img

பழமையான நடுகல் கோவை அருங்காட்சியத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடு

அவிநாசி, ஜூன் 14- அவிநாசி அருகே சேவூரில்  வியாழ னன்று கண்டறியப்பட்ட சுமார் 500 வரு டங்கள் பழமையான  நாயக்கர் காலத்து  நடுகல்லாக இருக்கலாம் என தொல்லியல் துறை கூறியிருந்தனர்.  இதனையடுத்து இந்த நடுகல்லை கோவை அருகாட்சியத் திற்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்த சேவூரில் புளியம்பட்டி செல்லும் சாலை சீரமைப்புப் பணி கடந்த சில மாதங் களாக நடைபெற்று வருகிறது.  இந்நிலை யில், சாலையின் ஓரமாக பழமையான நடுக் கல் சிற்பம் உள்ளது என தெரிய வந்தது. இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மூல மாக அந்த நடுகல்லை எடுத்துச் சென்று சேவூ ரில் உள்ள பெருமாள் கோவிலில் வரு வாய்த் துறையினரின் பாதுகாப்பாக வைத்த னர். இந்நிலையில் இது நாயக்கர் காலத்து கல்லாக இருக்கலாம் என தொல்லியல் துறையினர் கூறியதால்  நடுகல்லை கோவை அருங்காட்சியகத்திற்கு எடுத்து  செல்ல ஏற்பாடு நடைபெற்று வருகிறது.  

இதுகுறித்து, கோவை அருங்காட்சி யகத்தின் காப்பாளர் சிவக்குமார் கூறுகை யில், சேவூரில் கிடைத்த நடுக்கல் அருங்காட் சியகத்திற்கு சார்ந்த பொருளாக பார்க்கப்ப டுகிறது. திருப்பூரில் அரசு அருங்காட்சிய கம் இல்லாததால் கோவை அருங்காட்சி யகத்திற்கு எடுத்து வந்து பொதுமக்கள் பார் வைக்காக வைக்கப்படவுள்ளது. இதுதொ டர்பாக மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெற முயற்சியும், நடைபெற்று வருவதாக கூறினார்.