tamilnadu

தொழிற்சாலைகளை தாமாக மூடி ஒத்துழைக்க ஆட்சியர் வேண்டுகோள்

திருப்பூர், மார்ச் 23 – திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத் துத் தொழிற்சாலைகளையும் தாமாக முன்வந்து மூடி மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் கூறி யுள்ளார். இது தொடர்பாக திங்களன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அனைத்துத் தொழிற்சாலைகளையும் போர்க்கால அடிப்படை யில் ஆய்வு செய்வதுடன், ஆய்வின்போது ஆலை  வளாகம், ஆலையின் உள்ளும் மற்றும் பணியாளர்க ளுக்கும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற் கொள்ளாத ஆலைகளின் மீதும் உரிய சட்ட விதிக ளின்படி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந் தப்பட்ட துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து உணவு, உறைவிட மற்றும் சுகாதார வசதிகளை முறையாக நிறுவனத்தின் சார்பில் செய்து தர வேண் டும் என்றும், எக்காரணத்தைக் கொண்டும் பணியா ளர்கள் குடியிருப்பை விட்டு வெளியில் வராமல் கண்காணிப்பு நடவடிக்கைகளை முறையாக மேற் கொள்ள வேண்டும். அனைத்து நடவடிக்கைகளுக் கும் ஆலை உரிமையாளர்கள், அனைத்துத் தரப்பு மக்கள் ஒத்துழைப்பு நல்கிடுமாறு ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.