திருப்பூர், ஆக. 8 – பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு ஊழியர் கூட்டுறவு சங்க முறைகேடுகளைக் கண் டித்தும், ஊழியர்களுக்கான சேவைகளை சீர்குலைப்பதை எதிர்த்தும் பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கத்தின் சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு ஊழியர் கூட்டுறவு சங்கத்தில் பல்வேறு நிதி முறை கேடுகள் நடைபெறுவதாகவும், ஊழியர்கள் கடன் கேட்டு விண் ணப்பித்தால் மாதக்கணக்கில் இழுத்தடித்து தாமதம் செய்வ துடன், ஓய்வு பெற்றோருக்கான வைப்புத் தொகையைத் தருவ தில்லை, காலமான ஊழியர் குடும்பத்தாருக்கு தர வேண்டிய நிதிப்பலன்களையும் தருவ தில்லை என பல்வேறு குற்றச் சாட்டுகளின் அடிப்படையில், நிர்வாக சீர்கேட்டைக் களைந்து, ஊழியர்களின் சேவையை தாமதமின்றி வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. பிஎஸ்என்எல் மெயின் தொலைபேசி நிலையம் முன் பாக நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்துக்குக் கிளைத் தலைவர் வாலீசன் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்க பிரதிநிதித்துவ சபை உறுப்பினர்கள் விஸ்வ நாதன், ராமசாமி மற்றும் பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முகமது ஜாபர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் பிஎஸ்என்எல் மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியம் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோல், பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு ஊழியர் கூட்டுறவு சங்க முறைகேட்டைக் கண்டித்து பல்லடத்தில் பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.