தாராபுரம், நவ. 1- தாராபுரம் நகர் முழுவதும் தேங்கி கிடக்கும் குப்பை மேடுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் உள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இரும்பு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த குப்பை தொட்டிகளில் வீடுகளில் சேரும் குப்பைகள் கொட்டப்படும். அதில் குப்பைகள் நிறைந்தவுடன் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் முலம் அந்த குப்பை தொட்டிகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு ஐடிஐ கார்னர் பகுதியில் உள்ள நகராட் சிக்கு சொந்தமான குப்பைக் கிடங் குகளில் கொட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் தாராபுரம் நகராட்சி பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த குப்பைதொட்டிகள் நகராட்சி நிர்வாகத்தால் அப்புறப்படுத்தப் பட்டு குப்பை தொட்டி இருந்த பகு தியில் இனிமேல் குப்பைகளை கொட்டக்கூடாது எனவும், வீடுக ளில் சேரும் குப்பைகள் துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கப் படும் எனவும் அறிவித்தது. இந்த நடவடிக்கை பொதுமக் கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத் தியது. துப்புரவு பணியாளர்கள் குப்பை சேகரிக்க வரும்பொழுது வேலைக்கு செல்லும் பொதுமக்கள் குப்பைகளை கொடுக்க முடியாம லும், கொட்டமுடியாமலும் தவித்து வந்தனர். இதனால் வீடுகளில் அதிகப்படியாக சேர்ந்த குப்பை களை தெரு ஓரங்களில் கொட்டி வருகின்றனர். தாராபுரம் பீமரா யர் மெயின் வீதி, சக்தி நகர், தேவேந்திரர் தெரு, கண்ணன் நகர், ராஜேந்திரா நகர், பழைய ஹவுசிங் யூனிட், தாராபுரம் கிளை நூலகம் முன்புறம், நகராட்சி பூங்கா அருகில் என நகரின் பல பகுதிகளில் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு மலைபோல் காட்சி யளிக்கிறது. அகற்றப்படாமல் உள்ள குப்பைமேடுகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தெரு நாய்கள் அந்த குப்பைகளைக் கிளறி இழுத்து சென்று சாலைகளில் வீசு கிறது. இதனால் நகர்பகுதி முழுவ தும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள் ளது. எனவே நகராட்சி நிர்வாகம் மீண்டும் குப்பை தொட்டிகளை வைக்கவேண்டும் என பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (ந.நி)