தாராபுரம், மார்ச் 7 - விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதில் தமிழக அரசு பார பட்சமான அணுகுமுறையை கடைபிடித்து வருவதாக தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் பயிற்சி முகாம் தாராபுரம் உடு மலை சாலையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மதுசூதனன் தலைமை வகித்தார். தாராபுரம் தாலுகா செயலாளர் ஆர்.வெங்கட்ராமன் வரவேற்றார். மாநில பொது செயலாளர் பெ.சண்முகம், மாநில பொருளாளர் கே.பி.பெருமாள், மாநில துணைதலைவர் டி.ரவீந் திரன், மாவட்ட தலைவர் ஆர்.குமார் ஆகியோர் கருத்துரை யாற்றினர். முடிவில், மாநில துணை தலைவர் டி.கண்ணன் நிறைவுரையாற்றினார். முன்னதாக, மாநில பொது செயலாளர் பெ.சண்முகம் செய்தி யாளர்கள் சந்திப்பில் கூறியதா வது, தமிழகத்தில் கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்க ளில் விவசாய விளைநிலங்களில் உயர்அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. அந்த பிரச்சனையை பொறுத்தவரையில் விவசாயிக ளுக்கு இழப்பீடு வழங்குவதில் தமிழக அரசு வெளிப்படை தன்மை இல்லாமல், கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கு ஒரு மாதிரி யும், மற்ற விவசாயிகளுக்கு ஒரு மாதிரியாகவும் இழப்பீடு வழங்கு வது என பாரபட்சமான அணுகு முறையை கடைபிடித்து வரு கிறது. சமீபத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் தமிழக அர சிற்கு அளித்த பரிந்துரையின் ஒரு பகுதியில், பத்திரபதிவில் உள்ள அதிகபட்ச தொகையை முன்மாதிரியாக கொண்டு ஏற்க னவே தமிழக அரசு போட்டுள்ள நிலமதிப்பில் இரண்டே முக்கால் மடங்கு தொகையை இழப்பீடாக (25 சதவிகிதத்தை உயர்த்தி) வழங்க வேண்டும் என அளித் துள்ளார். ஆனால், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பத்திர பதிவில் மிகக் குறைவான தொகை எதுவோ அதை கணக்கில் எடுத்துக் கொண்டு அதிலிருந்து இரண்டே முக்கால் மடங்கு கூடுதலாக 25 சதவிகிதம் என்பதை ஏற்காமல் ஒரு பரிந்துரையை அளித்துள்ளார். பொதுவாகவே உயர் அழுத்த மின் கோபுரமாக இருந்தாலும், பெட்ரோலிய குழாய் பதிப்பதாக இருந்தாலும், நிலம் கையகப்படுத்தும் சட்டம் 2013 ஆக இருந்தாலும் சரி இவை அனைத்திலுமே நிலத்திற்கான இழப்பீட்டை தீர்மானிக்கிற அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட ஆட்சியர் விவசாயிக ளின் நலன்களை பாதுகாப்ப தற்கு பதிலாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நலனைப் பாது காப்பது, விவசாயிகளுக்கு இழப் பீடு வழங்குவதைக் குறைப்பது என்ற அணுகுமுறையை கடை பிடிக்கின்றனர். ஆகவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சந்தை மதிப்பை அடிப்படையாகக் கொண்டு இழப்பீட்டை தீர்மா னிக்க வேண்டும். அதேபோல் கோவை மாவட் டம் இருகூரில் இருந்து 7 மாவட் டங்களின் வழியாக ஐடிபிஎல் மூலமாக பெட்ரோலிய குழாய்கள் பதிக்கும் திட்டம் அறிவிக்கப் பட்டு தற்போது நிலம் கையகப் படுத்தும் பணிகளில் அந்த நிறு வனம் ஈடுபட்டுள்ளது. ஏற்க னவே இந்த பகுதியில் 2013 ஆம் ஆண்டு கெயில் குழாய் திட் டத்தை நிறைவேற்ற முன்வந்த போது விவசாயிகளின் போராட் டத்தின் விளைவாக அப்போதி ருந்த முதலமைச்சர் ஜெயல லிதா விவசாயிகளின் கருத்துக் களை கேட்டு விவசாய விளை நிலங்களில் கெயில் குழாய் திட்டத்தை நிறைவேற்ற அனு மதிக்கமாட்டோம் என்று சொல்லி தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவித்து பதிக்கப்பட்ட குழாய் உடனடியாக அப்புறப் படுத்தப்பட்டது. ஆனால் இப்போதிருக்கிற அம்மாவின் வழியில் செயல்படுவதாக சொல்லக்கூடிய அதிமுக அரசு விவசாயிகளுக்கு விரோதமாக கட்டாயப்படுத்தி விவசாய விளை நிலங்களில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்கு எதிராக திங்களன்று (மார்ச் 9 ) சேலத்தில் உள்ள பெட்ரோலிய குழாய் திட்டத் திற்காக நிலத்தை கையகப்படுத் தும் அலுவலகம் முன்பாக விவ சாயிகளின் பெருந்திரள் ஆர்ப் பாட்டம் நடைபெற உள்ளது. விவசாய விளைநிலங்களில் இந்த திட்டத்தை நிறைவேற்றக் கூடாது. சாலை வழியாக ஒரங் களில் இந்த திட்டத்தை நிறை வேற்ற வேண்டும். மாறாக, விவசாயிகளின் கோரிக்கைக்கு எதிராக விவசாய நிலங்களில் அத்துமீறி நுழைந்தால் தடுத்து நிறுத்துவது என தீர்மானித்துள் ளோம். மேலும் 2018 - 19 ஆம் ஆண் டிற்கான பயிர்காப்பீட்டு தொகை தமிழ்நாடு முழுவதும் நெற்பயிர் தவிர மற்ற எந்த பயிருக்கும் இது வரை வழங்கப்படவில்லை. இப்போது அடுத்த ஆண்டிற் கான பிரிமியம் பிடிக்கப்பட்டு வரு கிறது. ஆண்டு முடிந்து ஓராண்டு காலம் கடந்தபிறகும், பயிர் காப்பீட்டு தொகை விவசாயிக ளுக்கு வழங்கப்படாமல் இருப்பது தமிழ்நாடு அரசின் அக்கறையற்ற போக்கை காட்டுகிறது. ஆகவே பயிர் காப்பீட்டு நிறுவனங்களை தமிழக அரசு வற்புறுத்தி உடன டியாக 2018 - 19 ஆம் ஆண்டிற் கான பயிர்காப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு கிடைக்க நட வடிக்கை எடுக்கவேண்டும். தற்போது தமிழ்நாடு முழுவ தும் தென்னை மரங்களில் வெள்ளை ஈக்கள் மிக கடுமை யான பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இந்த ஈக்களை அழிக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் மகசூல் பாதிக் கப்பட்டு தேங்காய் உற்பத்தி குறைந்து விவசாயிகள் கடுமை யான வருவாய் இழப்பிற்கு ஆளாவார்கள். வெள்ளை ஈக் களை கட்டுப்படுத்துவற்கான ஆலோசனைகளை வேளாண் துறை அதிகாரிகள் அறிவித்திருந் தாலும், அவற்றை செயல்படுத்து வதற்கு விவசாயிகள் மிக கூடு தலாக செலவழிக்க வேண்டியுள் ளது. ஆகவே தமிழக அரசு வெள்ளை ஈக்களை கட்டுப்படுத் தும் திட்டத்தை செயல்படுத்து வதற்கான கூடுதல் நிதியை விவசாயிகளுக்கு வழங்கவேண் டும். இவ்வாறு அவர் தெரிவித் தார்.