tamilnadu

img

மேம்பாலத்தின் கீழ் தேங்கும் மழைநீர் - வாகன ஓட்டிகள் அவதி

அவிநாசி, ஆக். 26- அவிநாசி அருகே உள்ள அவிநாசிலிங் கம்பாளையம் செல்லும் மேம்பாலத்தின் கீழே தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட் சிக்குட்பட்ட அவிநாசிலிங்கம்பாளையம் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மழை பெய்து வருவதால் அவிநாசிலிங்கம்பாளையம் மேம்பாலத் தின் கீழே மழைநீர்  தேங்கியுள்ளது. இத னால் அவிநாசிலிங்கம் பாளையத்திலி ருந்து அவிநாசிக்கு செல்லும் வாகன ஓட்டி கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்ற னர். எனவே, மேம்பாலத்தின் கீழே தேங்கி  உள்ள மழை நீரை உடனடியாக அப்புறப்ப டுத்த வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.