கோவை, நவ.9 – கோவையில் பாலத்தின் அடியில் படுத்துக்கொண்டிருந் தவர் மீது மண்ணை கொட்டியதால் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை காந்திபுரம் பகுதி நூறடி சாலையில் உயர் மட்ட மேம்பால இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலத்திற்கு கீழ் தினக் கூலி வேலை செய்பவர்கள், சாணைபிடிப்பவர்கள், வீடு வீடாகச் சென்று பிளாஸ்டிக் பொருட்களை விற்பவர்கள் என பலர் இரவு நேரங்களில் தங்கியிருப்பது வழக்கம். இந் நிலையில் சனியன்று அந்த பாலத்தின் கீழ் உள்ள பகுதி களில் மண் கொட்டி வந்த பணியாளர்கள் பாலத்துக்கு கீழே ஒருவர் படுத்துக்கிடப்பதை அறியாமல் மண்ணை கொட்டிச் சென்றுள்ளனர். இதில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத் தக்க நபர் மண்ணுக்கு அடியில் சிக்கி பலியாகினார். இத னையடுத்து அதிகாலை அவ்வழியாக சென்றவர்கள் மண்ணுக்குஅடியில் இருந்து கை மற்றும் கால் வெளியே தெரிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து காந்திபுரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத் திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இறந்தவர்யார், எந்த ஊர் என்கிற விபரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.