tamilnadu

img

புனித லூர்து அன்னை திருத்தல தேர்திருவிழா

 அவிநாசி, பிப். 2- அவிநாசி அருகே சேவூர்  புளியம்பட்டி சாலையில் லூர்துபுரம் கிராமம் உள்ளது. இங்கு புனித லூர்து அன்னையின் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.  கோவை மறை மாவட்ட பொருளாளர் அருட் தந்தை ஜோ.பிரான்சிஸ் தலைமையில் கொடியேற் றம் நடைபெற்றது. அதை தொடர்ந்து தினசரி மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது. பிப்ரவரி 8 ஆம் தேதி துதி ஆராதனை, ஜெபமாலை, ஆடம்பர கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெறும். இதையடுத்து இரவு அலங்கார தேர் பவனி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். பிப்ரவரி 9 ஆம் தேதி கோவை ஆயர் மேதகு எல். தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் திருப்பலி நடைபெறும். தொடர்ந்து  லூர்துபுரம் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக அலங்கார தேர் பவனியும், இரவு  குழந்தைகள் பங்கு பெறும் கலை நிகழ்ச்சிகள் நடை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.