tamilnadu

img

மழைநீரை சேகரிக்க வலியுறுத்தி சிறப்பு கிராம சபை

அவிநாசி, ஜூன் 23- அவிநாசி அடுத்த கருவலூர் ஊராட்சியில் சனியன்று மழைநீரை சேகரிக்க வலியுறுத்தி சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங் களுக்கு உள்பட்ட 265 கிராம ஊராட்சிகள் உள்ளது. இந்த  ஊராட்சிகளில்   மழைநீர் சேமிப்பு குறித்து சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவிநாசி ஒன்றியம், கருவலூர் ஊராட்சியில் சனியன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில்,  தனி  வீடுகள், சமுதாய கூடங்கள் மற்றும் கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைக்கப்பட வேண்டும். குளங்கள் தூர்வாரப் பட வேண்டும்.  மரக்கன்றுகள் நட வேண்டும். வீடுகளில் உறிஞ்சுகுழிகள் அமைக்க வேண்டும். இதனால்  நிலத்தடி நீரை அதிகரிக்க செய்ய முடியும். மேலும் பொது இடங் களில்  நீர் சேமிப்பு அவசியம் குறித்தும், சரியான நீர் மேலாண்மை குறித்தும் சுவர் விளம்பரங்கள் செய்வதற்கு கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கருவலூர் ஊராட்சி சார்பில் வட்டாட்சியர் அலுவ லகத்திலிருந்து விஜயலட்சுமி, கிராம ஊராட்சி செயலாளர் பரமன் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண் டனர்.