tamilnadu

எரிசாராயம் பதுக்கிய நபரை பிடிக்க தனிப்படை அமைப்பு

அவிநாசி, ஜன. 20- அவிநாசி அருகே எரிசாராயம் பதுக்கி வைத் திருந்த நபரை பிடிக்க தனிப்படை அமைத்து போலீ சார் தேடி வருகின்றனர். அவிநாசி அருகே சின்னக்கானூரில் உள்ள தோட்டத்து வீட்டில்,  454 கேன்களில் 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை சேலம் மத்திய புலனாய்வுப் பிரிவு போலீசார் ஜன. 18ஆம் தேதி அதிகாலையில் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அவிநாசி மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்த வீட்டு உரிமையாளரான தொழிலதிபர் கணேசனை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத் தனர்.  இதைத்தொடர்ந்து முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரள மாநிலம், பாலக்காடு மாவட் டம், ஆலத்தூரை சேர்ந்த ஜனார்த்தனனை பிடிக்க தாராபுரம் ஆய்வாளர் வெங்கடேஷ் தலைமை யில் 10 பேர் அடங்கிய இரு தனிப்படைகள் அமைக் கப்பட்டு, தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

;