tamilnadu

img

திருப்பூரில் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் தர்ணா போராட்டம்

திருப்பூர், ஜன. 20 - திருப்பூர் 18ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் உள் ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இரண்டாவது மண்டல பிரிவு அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.  திருப்பூர் மாநகராட்சி பழைய 18 ஆவது (புதிய வார்டு 5) வார் டுக்குட்பட்ட நெருப்பெரிச்சலை அடுத்த எஸ்.ஆர்.வி.நகரில் நூற் றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதிக்கு 10 நாட் களுக்கு ஒருமுறை குடிநீர் விநி யோகம் செய்யப்படுவதாக கூறப் படுகிறது. மேலும் வீட்டு குடிநீர் குழாயில் குறைந்த அளவு குடிநீர் வருவதாகவும் தெரிகிறது.  இந்நிலையில் குடிநீர் சீராக வழங்க வேண்டும். அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனக் கோரி எஸ்.ஆர்.வி.நகர் பெண்கள் உள்பட பொதுமக் கள் காலிக்குடங்களுடன் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் சந்திரன் தலை மையில் திங்களன்று காலை பூலு வபட்டி அருகே உள்ள இரண்டா வது மண்டல 5ஆவது பிரிவு அலு வலகத்திற்கு வந்தனர். அங்கு அவர்கள் செங்கொடிகளை ஏந்தி யபடி கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.  இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆ.சிகாமணி, மகா லிங்கம், சி.பானுமதி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது அதிகாரிகள் வருவதற்கு தாமதமானதால் திடீரென அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைய டுத்து அங்கு விரைந்து சென்ற இரண்டாம் மண்டல சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன்  பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அவரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுவில், எஸ்.ஆர்.வி.நகரில் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை விநி யோகம் செய்யப்படும் குடிநீரை 5 நாட்களுக்கு ஒருமுறை தேவை யான அளவு வழங்க வேண்டும். வீட்டு குழாய்களில் குடிநீர் முறை யாக வழங்க வேண்டும்.அப்பகுதி யில் பெரும்பாலான வீதிகளில் அம்ருத் திட்டத்தின் கீழ் 4 ஆவது திட்ட குடிநீர் குழாய் பதிக்கவில்லை. அனைத்து வீதிகளிலும் குழாய்கள் பதிக்க வேண்டும். ஏற்கனவே தோண்டப் பட்ட குழிகளை மூடுவதுடன், இந்த பகுதிக்கு தார்சாலை, தெரு விளக்கு உள்பட அனைத்து அடிப் படை வசதிகளையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தனர். இம்மனுவை பெற்றுக் கொண்ட சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன் உடனடியாக மாநகராட்சி ஊழியர்களை சம் பந்தப்பட்ட பகுதிக்கு அனுப்பி மக்கள் கோரிக்கை தொடர்பான பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். இதன் பின்னர் போராட்டத்தை கைவிட்டு பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

;