உடுமலை புத்தகாலயம் மற்றும் திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 8 ஆவது புத்தகத் திருவிழா வரும் ஆகஸ்ட் 3 முதல் 12ஆம் தேதி வரை உடுமலையில் நடைபெற உள்ளது. அதனையொட்டி பள்ளி மாணாக்கர்களுக்கான ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி ஆகியவை திங்களன்று உடுமலை தேஜஸ் மஹாலில் நடைபெற்றது. இதில் 400க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் போட்டியில் கலந்து கொண்டு தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் புத்தகத்திருவிழாவின் போது வழங்கப்பட உள்ளது.