tamilnadu

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஊத்துக்குளியில் கையெழுத்து இயக்கம்

திருப்பூர், பிப். 5 - மத்திய மோடி அரசின் குடியு ரிமைத் திருத்தச் சட்டத்தைக் கைவிட வலியுறுத்தி மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் சார்பில் ஊத்துக்குளி யில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. ஊத்துக்குளி ஆர்எஸ் பகுதி யில் புதன்கிழமை கையெழுத்து இயக்கத் தொடக்க நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் திமுக ஊத்துக் குளி பேரூர் செயலாளர் கே.கே.ராசுக்குட்டி தலைமை வகித்தார். எழுத்தாளர் செ.நடேசன் இயக் கத்தைத் துவக்கி வைத்துப் பேசி னார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் வி.ஏ.சரவணன் உள்ளிட்டோர் உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கட்சியின் ஊத் துக்குளி தாலுகா செயலாளர் கே.ஏ.சிவசாமி, மதிமுக ஒன்றிய செயலாளர் வி.சுந்தரராஜு, இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் வி.கே.முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பொது மக்களிடம் கையெழுத்துப் பெறப்பட்டது.

;