tamilnadu

வீடற்ற ஏழைகளுக்கு தங்குமிடம், உணவு - ஆட்சியர்

திருப்பூர், மார்ச் 25- திருப்பூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், வீடற்ற ஏழைகளுக்கு தங்குமிடம், உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் க.விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.  அண்மைக் காலத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கு தலிலிருந்து மக்களை காத்திடும் பொருட்டு அரசு பல்வேறு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. 144 தடை உத்த ரவு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத் தடைக்காலத்தில் 5 நபர்களுக்கு மேல் பொது இடங்களில் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. சிறிய மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் மற்றும் உணவகங்கள், தேநீர் கடைகள், அம்மா உணவங்கள், மருந்தகங்கள், ஆவின் பால் விற்பனை நிலையங்கள், அரசு நியாய விலை கடைகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தவிர மற்ற அனைத்து வியாபார நிறுவனங்களும் இயங்காது. சில அத்தியாவசிய துறை கள் தவிர இதர அனைத்து அரசு அலு வலகங்களும், பொதுத்துறை நிறு வனங்களும் இயங்காது. அத்தியா வசிய பண்டங்கள், உணவுப் பொருட் கள், காய்கறிகள் மற்றும் மருந்து பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாக னங்கள், அவசர ஊர்திகள் (ஆம்பு லன்ஸ்) தவிர இதர அரசு மற்றும் தனி யார் பேருந்துகள், ஒப்பந்த வாகனங் கள், வாடகைக் கார்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.  வங்கிகள், ஏடிஎம் மையங்கள், பெட்ரோல் நிரப்பு நிலையங்கள், எரிவாயு விநியோக மையங்கள், விவசாய விலை பொருட் கள் விற்பனை மையங்கள், கால்நடை தீவன விற்பனை கடைகள், வழக்கம் போல் இயங்கும்.  உணவகங்களில்  உணவருந்த அனுமதியில்லை. ஆனால்  பார்சல் வாங்கிச் செல்லலாம்.  மேலும், இத்தகைய தடை காலத் தில் கர்ப்பிணி பெண்களுக்கு விரிவான மருத்துவ வசதிகள் மேற்கொள்ளவும் மற்றும் வீடற்ற ஏழைகளைக் கண்ட றிந்து அவர்களை தங்க வைக்கவும் மற்றும் அவர்களுக்கு தேவையான உணவுகளையும் வழங்குவதற்கு அலு வலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.