tamilnadu

சிறுமிக்கு பாலியல் தொல்லை - இளைஞர் கைது

அவிநாசி, ஜூன் 24 – சேவூரில் ஆறு வயதுள்ள இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல் துறையினர் செவ்வாயன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய் தனர். திருப்பூர் மாவட்டம், சேவூர் அம்பேத்கார் வீதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் பிராகாஷ்(30). இவர் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது டைய இரு சிறுமிகளை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மேலும் இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தால் கொன்று விடுவதாகவும் பிரகாஷ் மிரட்டியுள்ளார். இதுகுறித்து அறிந்த அச்சிறு மியின் பெற்றோர் அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் அடிப்ப டையில் காவல் நிலைய ஆய்வாளர் சரஸ்வதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர்.

;