tamilnadu

img

திருப்பூரில் ஆட்சியர் தலைமையில் அமைதிக்குழு அமைக்க மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் கோரிக்கை

திருப்பூர், மார்ச் 16 – திருப்பூரில் அமைதி நிலவவும், சமூக நல்லிணக்கத்தைப் பாது காக்கவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைதிக் குழுவை ஏற்படுத்துமாறு மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்ட ணிக் கட்சிகள் கோரிக்கை விடுத் துள்ளன. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனிடம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் திமுக மாநகரச் செயலாளர் டி.கே.டி. மு.நாகராஜ், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் என்.கோபால கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் எம்.ரவி, மதிமுக மாநகரச் செயலாளர் சு.சிவபாலன், விசிக மாவட்டச் செயலாளர் தமிழ்வேந்தன், முஸ் லிம் லீக் தலைவர் முஸ்தபா உள் ளிட்டோர் திங்களன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்திய அரசமைப்புச் சட்டத் திற்கு முரணாக மத்திய அரசு குடியுரிமைத் திருத்தச் சட் டத்தை இயற்றியுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராகவும், என்பிஆர், என்ஆர்சி ஆகிய நடவடிக்கைகளை ஆட்சேபித்தும் நாடு முழுவதும் கடந்த பல நாட் களாக அமைதி வழியில் அறப் போராட்டங்கள் நடந்து வரு கின்றன. அதே வேளையில் சில நாட்களாக ஆங்காங்கே குடியுரிமைத் திருத்தச் சட்டத் திற்கு ஆதரவு என்ற பெயரில் வன்முறையைத் தூண்டும் போராட்டங்கள் வேண்டு மென்றே நடத்தப்படுகின்றன.

தலைநகர் தில்லியில் கலவரம் ஏற்பட்டு பல உயிர்கள் பலி யாகியுள்ளனர். உடமைகள் நாசமாக்கப்பட்டுள்ளன. நாட் டில் கொந்தளிப்பான நிலை ஏற் பட்டுள்ளது. இந்நிலையில் தொழில் நக ரான திருப்பூரில் ஒரு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. எந்நேரத் திலும் கலவரம் ஏதாவது ஏற் பட்டுவிடுமோ என்ற அச்சத் துடன் அனைத்துத் தரப்பு மக் களும் உள்ளனர். ஏதாவது அசம் பாவிதம் ஏற்பட்டால் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில் நகர மான திருப்பூர் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே வரும்முன் காக்கும் வகையில் தீய சக்திகளைத் தனி மைப்படுத்தவும், அவர்களின் சதித் திட்டங்களை முறியடிக்கும் வகையிலும் மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தும் விதத் திலும் திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். எனவே அனைத்துக் கட்சி கள், தொழில் வர்த்தக அமைப் புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், தொழில் வர்த்தக அமைப்புகளின் நிர் வாகிகள் அடங்கிய அமைதிக் க்குழுவை ஏற்படுத்த வேண்டும். அதேபோல் வட்டார, ஒன் றிய, நகர வார்டுகள் அளவி லும் அமைதிக்குழுக்கள் ஏற் படுத்த வேண்டும், இக்குழுக் கள் ஆங்காங்கே கூடி மக்களி டையே அச்சத்தைப் போக்கும் வகையிலும், சமூக நல்லிணக் கத்தைப் பாதுகாக்கும் வகை யிலும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆட்சியர் உரிய வழிகாட்ட வேண்டும் என மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.