tamilnadu

அனுமதியின்றி மண் கடத்திய லாரிகள் பறிமுதல்

அவிநாசி, ஆக.13- அவிநாசியை அடுத்து கருவலூரில் வட்டாட்சியர் சாந்தி மற்றும் வருவாய்த் துறையினர் வாகனத் தணிக்கை மேற்கொண்ட னர். அப்போது, அவ்வழி யாக கிராவல் மண் ஏற்றி வந்த 3 டிப்பர் லாரிகளை மறித்து சோதனை மேற் கொண்டனர். இதில், தமிழ் நாடு சிறு கனிம விதிகள் சட்டத்தின் கீழ் முறையான ஆவணங்கள் இல்லாமலும், அனுமதிக்கப்பட்ட குவாரி யில் இருந்து கிராவல் மண் எடுக்காமல், அனுமதி இல்லாத இடத்தில் இருந்து மண் எடுத்து வந்ததும், ஒரே அனுமதிச்சீட்டை திருத்தம் செய்து பல முறை உபயோ கித்து வந்ததும் தெரியவந் தது.

இதையடுத்து டிப்பர் லாரிகளை வட்டாட்சியர் பறிமுதல் செய்து, கிராம உதவியாளர் மூலமாக அவி நாசி போலீசாரிடம் ஒப்ப டைத்தார். மேலும் மூன்று லாரிகளின் உரிமையாளர் களான சம்பந்தமூர்த்தி மற் றும் குணசுந்தரி ஆகியோர் மீதும், லாரிகளை ஓட்டி வந்த ஓட்டுநர்கள் சுந்தர பாண்டியன், மந்திரியப்பன் மற்றும் மணிகண்டன் ஆகிய 3 பேர் மீதும் அவிநாசி காவல் நிலையத்தில் வட்டாட்சியரால் புகார் அளிக்கப்பட்டது. இதுகு றித்து அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.