அவிநாசி, மே 18 - அவிநாசி அருகே சேவூர் மற்றும் பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தனிமனித இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. கெரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் சூழலை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு விதிக் கப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஊரடங்கு உத்த ரவு சில கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டது. இதைய டுத்து மளிகைக் கடைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் தனிமனித இடைவெளியை பின் பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் சேவூர், பெருமாநல்லூர் பகுதிகளில் உள்ள கடைகள் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் செயல்பட துவங்கியது. இதனைக் கட்டுப்படுத்த சேவூர், அவிநாசி மற்றும் பெருமாநல்லூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதில் சேவூர் பகுதி யிலுள்ள பேக்கரி, துணிக்கடை மற்றும் செல்போன் கடை உள்ளிட்டவைகளில் தனிமனித இடைவெளியை பின்பற் றாமல் இருந்ததைக் கண்ட காவலர்கள் சம்மந்தப்பட்ட கடை களை பூட்டி சீல் வைத்தனர்.