tamilnadu

img

ரோட்டரி சங்கத்தின் முப்பெரும் விழா 

 அவிநாசி, செப். 26- அவிநாசியில் கிழக்கு ரோட்டரி சங்கத்தின் சார்பில் புதனன்று முப்பெரும் விழா நடைபெற்றது. அவினாசி கிழக்கு ரோட்டரி சங்கத்தின் சார்பில்  முப்பெரும் விழா தனியார் திருமண மண்டபத் தில் நடைபெற்றது. இதில் மு சுதந்திரநல்லூர் (எ)  எம்.நாதம்பாளையம் பெயர் பலகையை ரோட்டரி சங்கத்தின் மாவட்ட ஆளுநர் ஏ.கார்த்திகேயன் திறந்து வைத்தார். இதையடுத்து இளைஞர்க ளுக்கான சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் விழிப்புணர்வு குறித்து மாவட்ட தொழில் மையத் தின் பொதுமேலாளர் எஸ்.கந்தசாமி , இளம் பொறியா ளர் பிருந்ததேவி ஆகியோர் பங்கேறு சிறப்புரை யாற்றினர். இந்த விழாவில் அவிநாசி கிழக்கு ரோட்டரி சங்க உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

;