tamilnadu

img

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு பொது மக்கள் தர்ணா

அவிநாசி, பிப். 2- அவிநாசி அருகே தெக்கலூரில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தர்ணாவில் ஈடுபட்ட னர். அவிநாசி ஒன்றியம், தெக்கலூர் பகுதியில் 3000க்கு மேற் பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நம்பி யாம்பாளையம் செல்லும் சாலையில் பல வருடங்களாக மளிகைக் கடை அருகே டாஸ்மாக் நிறுவனத்தின் மதுக் கடை அமைப்பதற்கு கடை கட்டியுள்ளார். இதையறிந்த அப் பகுதி பொதுமக்கள் மளிகை கடை முன்பு தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து, தகவலறிந்த அவிநாசி காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக் கள் கோரிக்கை உரிய அதிகாரிக்கு தெரியப்படுத்துவோம் என்று கூறிய பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.