அவிநாசி, மார்ச் 15- அவிநாசி அருகே கிணற்றில் தவறி விழுந்தவர் உயிருடன் மீட்கப்பட்டார். அவிநாசி அருகே உப்பிலிபாளையம் ஊராட்சி சங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த குழந்தைவேல் வீட்டிற்கு உறவினராக வந்தவர் தேவகோட்டைப் பகுதியைச் சேர்ந்த கொழஞ்சி மகன் பழனிசாமி (35). இவர் சனியன்று சங்கம்பாளையம் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான தண்ணீர் இல்லாத கிணற்றில் 80 அடி ஆழமுள்ள கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததாகக் கூறப் படுகிறது. தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினர் பழனிசாமியை சிறு காயங்களுடன் உயிருடன் மீட்டனர்.