tamilnadu

பிச்சை எடுத்த மூன்று குழந்தைகள் மீட்பு: காப்பகத்தில் ஒப்படைப்பு

திருப்பூர், ஜூலை 26- திருப்பூரில் பொது இடங்களில் பிச்சை எடுத்து வந்த 3 குழந்தைகளை சைல்டுலைன் அமைப்பினர் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். திருப்பூர் மாவட்டம், புஷ்பா தியேட்டர் பகுதி யில் 3 குழந்தைகள் பிச்சை எடுத்து வருவதாக திருப் பூர் சைல்டுலைன் அமைப்புக்கு சனியன்று தகவல் வந்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த சைல்டுலைன் அமைப்பின் நிர்வாகிகள், அங்கு பிச்சை எடுத்துக்கொண்டிருந்த 7 மற்றும் 9 வயது டைய இரண்டு பெண் குழந்தைகளையும், 10 வயது டைய ஒரு ஆண் குழந்தையும் மீட்டனர்.

இதன் பின் னர் குழந்தைகளிடம் நடத்திய விசாரணையில், அவர் களுடைய பெற்றோர்கள் குமரன் சிலை அருகில் சாலையோரத்தில் தங்கியிருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்று, குழந்தைகளின் பெற் றோரான பாபு, மஞ்சு ஆகியோரிடம் விசாரித்ததில், அவர்கள் ஆந்திரா மாநிலத்தில் இருந்து பிழைப்பு தேடி திருப்பூருக்கு வந்ததாக தெரிவித்தனர்.

மேலும், கொரோனா வைரஸ் பரவலால் வேலை எதுவும் கிடைக்காததாலும், உணவுக்கே மிகவும் சிரமப் பட்டு வருவதாலேயே குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, குழந் தைகள் மூவரையும், சைல்டுலைன் அமைப்பினர் அழைத்து சென்று தற்காலிகமாக காப்பகத்தில் ஒப்ப டைத்தனர்.