tamilnadu

img

புதிய சாலைக்கு கடைக்கால் மண் அமைக்க கோரிக்கை

திருப்பூர், ஜூலை 17 - ஊத்துக்குளி பேரூ ராட்சி குன்னம்பாளையம் பகுதியில் நபார்டு திட்டத் தில் அமைக்கப்பட்ட புதிய  தார்ச்சாலைக்கு கடைக் கால் மண் அமைக்குமாறு முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஆர்.குமார் வலியு றுத்தி உள்ளார். ரூ.50 லட்சம் மதிப் பீட்டில் அமைக்கப்பட் டுள்ள இச்சாலையில் கடைக்கால் மண் அணைக் காமல், புதிய சாலை பணி  முடிக்கப்பட்டு உள்ளது. இதனால் இருபுறமும் செல் லும் வாகன ஓட்டிகள் ஓரமாக ஒதுங்கும் போது வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே நபார்டு திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய சாலை பணி நெடுகிலும் கடைக் கால் மண் அணைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கடைக்கால் மண் அமைக்காமல் ஒப்பந்ததாரர் பணி  முடித்திருந்தால் அதன் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்.குமார் ஊரக வளர்ச்சித்துறையைக் கேட்டுக்  கொண்டுள்ளார்.

;