tamilnadu

img

வடிகால் பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை

உடுமலை, அக். 15- உடுமலையில் மழைநீர் வடிகால் கட்டும் பணி களை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் ரயில் நிலையம் செல் லும் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழை நீர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் காந்தி சதுக்கம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தளி சாலையில் ரயில்வே சுரங்கப் பாலத்தின் வழித்தடத்தை மக்கள் பயன் படுத்தி வருகின்றனர். மேலும், அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு மாணவிகள் வருவதற்கும் இவ் வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றனர். தற் போது இப்பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால், இந்தச் சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் கட்டும் பணி களை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் அதிகாரிகளுக்கு  கோரிக்கை விடுத்துள்ளனர்.