திருப்பூர், செப். 11 – தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தென்னம் பாளையம் தினசரி சந்தை பகல் நேரங்களில் செயல்பட தடை விதிக்கப்பட்டு இரவு நேரம் மட்டும் செயல்பட்டு வந்தது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு வணிக நிறுவனங்கள், பனியன் நிறுவனங்கள் முழு நேரமும் செயல்படுகின்றன. ஆனால் தென்னம்பாளையம் தினசரி சந்தைக்கு இதுவரை எந்த தளர்வும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இதனால் விவ சாயிகள் விளைபொருட்களைக் கொண்டு வருவதிலும், மக்கள் இரவு நேரங்களில் வந்து காய்கறிகள் வாங்குவதி லும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் விளைபொருட்கள் தேங்கி விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்ற னர்
எனவே திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தென்னம்பாளையம் தினசரி சந்தையை மீண்டும் பகல் நேரம் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக அமைப்பின் மாவட்டத் தலைவர் எம்.ஈஸ்வரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளி யன்று மனு அளிக்கப்பட்டது.