tamilnadu

img

பிழையான பட்டாவை மாற்றி வழங்க ஆட்சியரிடம் கோரிக்கை

திருப்பூர், பிப். 5 – கணியாம்பூண்டி பகுதியில் வழங்கப்பட்ட பட்டாவில் க.ச.எண் தவறுதலாக பதிவு செய்ததால் பத்திரப் பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே உடனடியாக அந்த தவறைத் திருத்தி புதிய பட்டா வழங்குமாறு கணியாம்பூண்டி பகுதி மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுதொடர்பாக கணியாம்பூண்டி பகுதி பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.ராஜேஷ் உள்ளிட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அவிநாசி வட்டம், கணியாம்பூண்டி கிராமத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு எங்களுக்குப் பட்டா வழங் கப்பட்டது. இந்த நத்தம் பட்டாவில் க.ச.எண் 82/1  என தவறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால்  மேற்படி இடத்திற்குரிய பட்டாவை பத்திரப்பதிவு செய்ய முடியாமலும், வங்கியில் வீட்டுக் கடன் பெற முடியாமலும் தவித்து வருகிறோம். இதுகுறித்து பல முறை மனு அளித்தும் எவ்வித தீர்வும் கிடைக்க வில்லை. எனவே மேற்படி பிழையான பட்டாவை  ரத்து செய்துவிட்டு புதிதாகப் பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அம்மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.