tamilnadu

சாலை வரியை ரத்து செய்திடுக வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை

திருப்பூர், ஜூலை 20– சாலை வரியை ரத்து செய்திட வலியுறுத்தி சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ வெங்கட் ரமணியிடம் மனு அளித்தனர். கொரோனா பேரிடர் காலத்தில் சுற்றுலாத்துறை சார்ந்த எங்களது வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையா ளர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இச்சூழலில், கடன் தவணைத் தொகை செலுத்தக்கோரி கட்டாயப்படுத்தும் நிதி நிறுவனங்கள் ஒருபுறம், சாலை வரி கட்ட வேண்டும் என்று மற்றொரு புறம் என கடும் இன்னல் களை அனுபவித்து வருகிறோம். எனவே தவணைத் தொகையை உடனடியாக ரத்து செய்வதோடு, ஓட்டுநர்க ளுக்கு பேரிடர்கால நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண் டும். இதேபோல், இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மூலமாக பேரிடர் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய சுற்றுலா வாகன ஓட்டுநர் சங்கத்தினர் திருப்பூர் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெங்கட்ரமணியிடம் அனைத்திந்திய சுற்றுலா வாகன ஓட்டுநர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

;